fbpx
Homeதலையங்கம்இயற்கையோடு இணைந்திருப்போம்

இயற்கையோடு இணைந்திருப்போம்

இப்போது உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா பெருந்தொற்றுக்கும் இயற்கை மருத்துவத்தின் மூலம் தீர்வுகாண முடியும் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. கொரோனாவுக்கு சித்த மருத்துவமும் சிறந்த தீர்வு தரும் என்று சித்த மருத்துவர்கள் ஆணித்தரமாக வலியுறுத்துகின்றனர்.

இப்போது தமிழக அரசும் கடந்த ஆண்டைப்போலவே கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை சென்னை வியாசர்பாடியில் தொடங்கியுள்ளது. இங்கு சிகிச்சை பெறுவோருக்கு கபசுரக்குடிநீர், தாளிசாதி சூரணம், ஆடாதொடை, மணப்பாகு, கரிசாலைப்பால், மூலிகை உணவுகள் உள்ளிட்ட சித்த மருந்துகள் வழங்கப்படுகின்றன. மேலும் 12 மாவட்டங்களில் சித்த மருத்துவ சிகிச்சை மையங்களை அமைக்க உள்ளது தமிழக அரசு.

மின்னல் வேகத்தில் பரவிவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, இத்தகைய மாற்றுமுறை சிகிச்சைகளை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். கொரோனா தொற்று ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் சித்த மருத்துவத்தை நாடி, நோய் நீங்கப்பெற இது ஒரு நல்ல வாய்ப்பு.
கொரோனா தொற்றின் மூல ஊற்றாக கருதப்படும் சீன நாட்டில் இந்த நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதற்கு சீனாவின் பாரம்பரிய மருத்துவ முறையும் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி, யோகா சிகிச்சை, பிராணாயாமம் போன்ற நம் பாரம்பரிய மருத்துவ முறைகளின் மூலம் நிச்சயம் இந்த நோயை கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும். அதற்கான மையங்களை அமைத்து தரும்போது மக்கள் தைரியமாக அங்கு போய் சிகிச்சை எடுத்துக்கொள்ள முன்வருவார்கள்.
புதிய அரசு பொறுப்பேற்று ஒரு சில நாட்களிலேயே இதற்கான முயற்சிகளை எடுத்திருப்பதற்கு பாராட்டுக்கள்.

படிக்க வேண்டும்

spot_img