fbpx
Homeபிற செய்திகள்ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்களின் மண் வள பாதுகாப்பு விழிப்புணர்வு

ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்களின் மண் வள பாதுகாப்பு விழிப்புணர்வு

அழிந்து வரும் மண் வளத்தை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஈஷா சம்ஸ் கிரிதி மாணவர்கள் 40 பேர் கோவையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நம்முடைய பாரம்பரிய கலையான களரியின் மூலமும், ஃப்ளாஸ் மாப் நடனத்தின் மூல மும் மக்களின் கவனத்தை ஈர்த்து மண் வள பாதுகாப்பு குறித்து அவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

இது தொடர்பாக ஈஷா சம்ஸ் கிரிதி மாணவர்கள் கூறுகையில், “மண் வளம் என்பது உலகளவில் வேகமாக அழிந்து வருகிறது.

ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு ((UNFAO) தற்போது நாம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காவிட்டால், உலகில் மேற்பரப்பு மண்ணின் வளம் அடுத்த 60 ஆண்டுகளுக்குள் முற்றி லும் காணாமல் போய்விடும் என எச்சரித்துள்ளது.

சர்வதேச விஞ்ஞானிகள் 2045-ம் ஆண்டுக்குள் உலக மக் கள் தொகை 930 கோடியாக அதிகரித்து விடும். அதேசமயம், உணவு உற்பத்தி 40 சதவீதம் குறைந்து விடும் அபாயம் உள்ளது என எச்சரித்துள்ளது.

அந்த நிலை உருவானால் உள்நாட்டு கலவரங்களும், பசி, பட்டினி பிரச்சினைகளும் அதிகரிக்கும். ஆக வே, மண் வளத்தை காக்க நாம் இப்போதே களமிறங்க வேண்டும்.

உலக அளவில் மண் வளத்தை பாதுகாக்க அரசாங்கங்கள் சட் டங்களை இயற்ற வலியுறுத்தியும், இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ‘மண் காப்போம்‘ என்ற உலகளா விய சுற்றுச்சூழல் இயக்கத்தை சத்குரு தொடங்கி உள்ளார்.

அதற்காக, அவர் லண்டனில் இருந்து தமிழ்நாடு வரை 3 கண்டங்கள் மற்றும் 27 நாடுக ளுக்கு 30,000 கி.மீ. தனி ஆளாக மோட்டார் சைக்கிளில் பயணித்து விழிப்புணர்வு ஏற் படுத்தி வருகிறார்.

அத்துடன், உலகம் முழுவதும் உள்ள ஈஷா தன்னார்வலர்கள் பல்வேறு வழிகளில் இவ்வியக்கம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாகவே, நாங்கள் இந்நி கழ்ச்சியை கோவையில் நடத்தி உள்ளோம்” என்றனர்.

படிக்க வேண்டும்

spot_img