fbpx
Homeபிற செய்திகள்கொரோனா நிவாரண நிதிக்கு சக்தி மசாலா நிறுவனம் ரூ.5 கோடி வழங்கியது

கொரோனா நிவாரண நிதிக்கு சக்தி மசாலா நிறுவனம் ரூ.5 கோடி வழங்கியது

சக்தி மசாலா நிறுவனம் சார்பில், கொரோனா நிவாரண நிதியாக தமிழக அரசுக்கு ரூ.5 கோடி தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


இது குறித்து சக்திமசாலா நிறுவனம் தெரிவித்துள்ள அறிக்கையில், ஈரோட்டில் உள்ள சக்தி மசாலா நிறுவனம் பல்வேறு சமூக பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. கொரோனா முதல் அலை வந்த கடந்த ஆண்டும், பல்வேறு நிவாரணப்பணிகளில் முழு மூச்சுடன் செயல்பட்டார்கள்.

இந்த ஆண்டும் சக்தி மசாலா நிறுவனம் பல்வேறு கொரோனா நிவாரண பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.


தமிழகத்தில் கொரோனா பேரிடர் எதிர்கொள்ள நிவாரண நிதியாக அனைவரும் பங்களிப்பு செய்ய வேண்டும் என ஊடகங்கள் வாயிலாக முதல்வர் ஸ்டாலின், கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி, சக்தி மசாலா நிறுவனம் சார்பில் ரூ.5 கோடி நிவாரண நிதியை தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு மே.15 ம் தேதி வங்கி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து முதல்வருக்கும் கடிதம் அனுப்பி உள்ளார்கள்.


கூடிய விரைவில் கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு பொது மக்கள் அனைவரும் நலமுடன் வாழ இறைவனை வணங்கி வேண்டுகிறது சக்தி மசாலா நிறுவனம், என நிர்வாக இயக்குநர்கள் பி.சி துரைசாமி. சாந்தி துரைசாமி தெரிவித்துள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img