fbpx
Homeபிற செய்திகள்கோவை மாநகர் ரோட்டரி இன்டஸ்ட்ரியல்சிட்டி புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

கோவை மாநகர் ரோட்டரி இன்டஸ்ட்ரியல்சிட்டி புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

கோவை மாநகர் ரோட்டரி இன்டஸ்ட்ரியல்சிட்டி புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா ரேஸ் கோர்சில் உள்ள மூத்த வழக்கறிஞர் எம்.சுந்தரவடிவேலு தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

கோவை மாநகர ரோட்டரி இன்டஸ்ட்ரியல் சிட்டி 2021& 2022ம் ஆண்டிற்கான தலைவராக சந்தோஷ் குமார், செயலாளராக மகேஷ்வரன், பொருளாளராக கனகராஜ் ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர்.

மேலும் சக்தி, சரவணன், சீனிவாசன், ஜெயராமன், கவுரிசங்கர், டாக்டர் உமா பிரபு, டாக்டர் மகேஷ், சபியுல்லா மற்றும் பலர் சேர்மன் ஆக பதவி ஏற்றுக்கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி 3201 சார்ந்த மாவட்ட ஆளுநர் ராஜசேகர், துணை ஆளுநர் ராயல் ஏஜென்சிபாலகிருஷ்ணன், மாவட்ட இயக்குனர் குமரேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக கோவை பிரபல மூத்த வழக்கறிஞர் எம்.சுந்தரவடிவேலு கலந்துகொண்டு பேசினார். விழாவில் பேச்சாளர் சோம வள்ளியப்பன் பங்கேற்று தலைமை உரையாற்றினார்.

விழா ஒருங்கிணைப்பாளர்களாக ரிஷிவிக்னம் யோகா மையம் ரஞ்சனி செயல்பட்டார். இதுகுறித்து ரோட்டரி இன்டஸ்ட்ரியல்சிட்டியின் நிறுவன தலைவர் வக்கீல் பிரபுசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்த ரோட்டரி சங்கம் கொரோ னா தடுப்பு உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறது. மேலும் மருத்துவ முகாம். கண்சிகிச்சை முகாம் உள்ளிட்ட பல்வேறு சமூக பணிகளை ஆற்றி வருகிறது.

இந்த சங்கத்தில் 40 உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் புதிய உறுப்பினர்களாக குரு அடுப் படி உரிமையாளர் சந்திரசேகர், மற்றும் சண்முகம், என்ஜினியர் அம்பலவாணன் ஆகியோரும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

மேற்கண்ட வாறு ரோட்டரி சங்கத்தின் நிறுவன தலைவர் வக்கில் பிரபுசங்கர் தெரி வித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img