fbpx
Homeபிற செய்திகள்செவிலியர் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற உலக சுகாதார தின பேரணி

செவிலியர் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற உலக சுகாதார தின பேரணி

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7-ம் தேதி உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத் தலின்படி நமது கிரகம், நமது ஆரோக்கியம் என்ற தலைப்பில் இந்த ஆண்டு உலக சுகாதார தினம் அனுசரிக்கப்படுகிறது.

பெரியநாயக்கன் பாளையத்தில் அமைந்துள்ள யுனைடெட் செவிலியர் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த தலைப்பை முன்னிறுத்தி ஜோதி புரத்தில் துவங்கிய பேரணி வீரபாண்டி பிரிவில் அமைந்துள்ள விவேகம் பள்ளியில் நிறைவுற்றது.

பேரணியை யுனைடெட் தொழில் நுட்பக் கல்லூரி முதல்வர் முனைவர் ராம்குமார், யுனைடெட் செவிலியர் கல்லூரியின் முதல்வர் ரூபி அனிதா, பெரியநாயக்கன்பாளையம் சரக காவல்துறை அதிகாரி தினேஷ் குமார் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இந்த தகவலை கல்லூரியின் உடற்கல்வி துறை இயக் குனர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img