fbpx
Homeபிற செய்திகள்ஜீ குன்டோ மார்ஷியல் ஆர்ட்ஸ் கோவை அணி சாம்பியன்

ஜீ குன்டோ மார்ஷியல் ஆர்ட்ஸ் கோவை அணி சாம்பியன்

தமிழ்நாடு அளவிலான ஜீ குன்டோ மார்ஷியல் ஆர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி, கோவை அருகே பேரூர் ஆதீனத்திற்கு உட்பட்ட தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் மற்றும் தமிழ் கல்லூரியில் நடந்தது.

தமிழ்நாடு வுட் குன்டோ அசோசியேசன் சார்பாக நடைபெற்ற போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

போட்டி சாண்டா மற்றும் ஃபார்ம்ஸ் என்னும் இரு பிரிவுகளில் நடைபெற்றது. கோவை மாவட்ட மாணவர்கள் பல பிரிவுகளில் பங்கேற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர்.

இப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் மாணவர்கள் வரும் டிசம்பர் மாதம் டெல்லியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுகின்றனர்.

போட்டியை தமிழ்நாடு மாநில தமிழ்நாடு ஜுட் குன்டோ அசோசியேசன் தலைவர் பாலமுரளி கிருஷ்ணன், செயலாளர் விஜயகுமார், மாஸ்டர்கள் ஒருங்கிணைத்தனர். போட்டியை பேரூர் ஆதீனம் துவக்கி வைத்து மாணவர்களை வாழ்த்தினார்.

படிக்க வேண்டும்

spot_img