fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல தலைவர் அலுவலகம் திறப்பு விழா

திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல தலைவர் அலுவலகம் திறப்பு விழா

திருப்பூர் முருகம் பாளையம் பகுதியில் உள்ள நான்காவது மண்டல பகுதிக்கு உட் பட்ட 41 வது வார்டு முருகம்பாளையம் பகுதியில் 11.50 லட் சம் மதிப்பிலான புதிதாகக் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தில் மண்டல தலைவர் அலுவலகத்தை திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், மண்டல குழு தலைவருமான இல. பத்ம நாபன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

மேலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 41வது வார்டு முருகம்பாளையம் பகுதியிலுள்ள வளர்மதி கூட்டுறவு அங்காடியில் பயனாளிகளுக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சியை யும் மண்டலக் குழுத் தலைவருமான இல.பத்மநாபன் துவக்கி வைத்தார்.

பின்பு இந்த நிகழ்ச் சியில் திமுக மீனவர் அணி குருசாமி, குட்வின் செல்வம், பாலா, ரமேஷ், சதீஸ், பழனிவேல், மோகன்ராஜ், சுந்தர், நரேந்திரன், குமார், தம்பி சாமிநாதன் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், பொது மக்கள் ஏரா ளமானோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img