வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக ஐந்தாம் தளத்தில் (வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று தீவிர போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெறுவதையொட்டி) பொதுசுகாதாரத்துறை, கல்வித்துறை, சமூகநலத்துறை, வருவாய்த்துறை மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆகியோருடன் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
உடன் இணை இயக்குநர் மருத்துவ பணிகள் கண்ணகி, துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் பானுமதி, மாநகர நல அலுவலர் மணிவண்ணன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் செல்வி ஆகியோர் உள்ளனர்.