fbpx
Homeபிற செய்திகள்மேட்டுப்பாளையம் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வைத்து காட்டு பன்றி வேட்டை - 2 பேர் கைது

மேட்டுப்பாளையம் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வைத்து காட்டு பன்றி வேட்டை – 2 பேர் கைது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள ஆதிமாதையனூர் பகு தியில் காட்டுப்பன்றியை நாட்டு வெடிகுண்டு வைத்து வேட்டையில் ஈடுபடுவதாக காரமடை வனத்துறையினருக்கு தக வல் தெரிய வந்துள்ளது.

வனசரகர் மனோகரன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து சென்று அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, ஆதிமாதை யனூர் கருப்பராயன் கோவில் பின்புறம் உள்ள பள்ளத்தில் மூவர் காட்டுப் பன்றியை நாட்டு வெடிகுண்டு வைத்து வேட்டையாடி இறைச் சியை சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சின்னச்சாமி(35), கவின்குமார்(24) ஆகி யோரை வன உயிரின பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கிட் டான்(55) என்பவர் தப்பி ஓடியுள்ளார்.

கைதான இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையி லடைத்தனர். மேலும், நாட்டு வெடிகுண்டு தயா ரிக்கும் நபர் குறித்தும் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img