fbpx
Homeபிற செய்திகள்அலையன்ஸ் சங்கம் நடத்திய நிலத்தடி நீர் கருத்தரங்கம்

அலையன்ஸ் சங்கம் நடத்திய நிலத்தடி நீர் கருத்தரங்கம்

கோயம்புத்தூர் ஹில் சிட்டி அலையன்ஸ் சங்கத்தின் சார்பில் கோவைபுதூர் விஎல்பி ஜானகி அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக தண்ணீர் தின விழாவையொட்டி நிலத்தடி நீர் மற்றும் நீலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது தொடர்பான கருத்தரங்கத்தை அலையன்ஸ் சங்க மாவட்ட ஆளுநர் ஜி.சீனிவாசன் துவக்கி வைத்தார்.

முதல் துணை ஆளுநர் டாக்டர் வி.சீனிவாச கிரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

கல்லூரி முதல்வர், துணை முதல்வர், விரிவுரை யாளர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில், அலையன்ஸ் அமைச்சரவை செயலாளர் பி. ரமேஷ், அமைச்சரவை பொருளாளர் எஸ்.சண் முகம், பிஆர்ஓ சங்கர் செல்வராஜ், மாவட்ட ஜிஎம்டி ஒருங்கிணைப்பாளர் டி.எஸ்.நிதீஷ், வட்டாரத் தலைவர் வள் ளியம்மாள், மாவட்டத் தலைவர்கள் பிரியா கிரி, எஸ்.பிரபாகரன், ஹில் சிட்டி அலையன்ஸ் சங்கத் தலைவர் வி.சதீஷ்குமார், செயலாளர் பி.சரவண ராஜா மற்றும் பொருளாளர் ஆத்மா சம்பத் ஆகியோர் கலந்து கொண் டார்கள்.

படிக்க வேண்டும்

spot_img