fbpx
Homeபிற செய்திகள்இந்திய பட்டயக் கணக்கறிஞர்கள் நிறுவனத்தின் கோவை கிளை புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

இந்திய பட்டயக் கணக்கறிஞர்கள் நிறுவனத்தின் கோவை கிளை புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

இந்திய பட்டயக் கணக்கறிஞர்கள் நிறுவனத்தின்(ஐசிஏஐ) கோவை கிளையில் 2022-2023-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் அண்மையில் பதவியேற்றுக் கொண் டனர்.

தலைவராக என்.வி.பழனிச்சாமி, துணைத் தலைவராக து. நாககுமார், செயலாளராக ப.விஷ்ணு ஆதித்தன், பொருளாளராக ராகுல் சந்திரசேகரன், மாணவர்கள் அமைப்புத் தலைவராக சர்வஜித் எஸ் கிருஷ்ணன், நிர்வாக உறுப் பினர்களாக ஆர்.சதீஷ்,எம்.தங்கவேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களின் பதவியேற்பு விழா துடியலூரில் உள்ள சங்கக் கிளை அலுவ லகத்தில் நடந்தது. முன்னாள் தலைவர் எஸ்.பிரபு வரவேற்று, 2021-ம் ஆண்டின் சங்கச் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். தொடர்ந்து புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றனர்.
தலைமை விருந்தினர் எஸ்.என்.ஆர்சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர்

டி.லக்‌ஷ்மிநாராயணசாமி பேசும்போது, பட்டயக் கணக்கறிஞர்கள் மாறிவரும் பொருளாதாரா சூழலுக்கேற்ப தங்களது செயல்பாடுகளை வடிவமைத் துக்கொண்டு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவும் மேம் பாட்டுக்காகவும் திறம்பட பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஐசிஏஐயின் முன்னாள் தலைவர் ஜி. இராமசாமி, தென்மண்டல முன்னாள் தலைவர் கே.ஜலபதி மற்றும் தென்மண்டல நிர்வாக உறுப்பினர் எஸ். இராஜேஷ்,கிளையின் முன்னாள் தலைவர்கள் எல். காமேஷ்,எஸ்.ஏ. கோபாலகிருஷ்ணன், தென்மண்டல முன்னாள் தலைவர் கே.சண்முக சுந்தரம் ஆகியோர் புதிய நிர் வாகிகளை பாராட்டிப் பேசினர்.

கிளைச் செயலாளர் ப.விஷ்ணு ஆதித் தன் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img