தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில், ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, ஈரோடு மாநகராட்சி மத்திய பேருந்து நிலையத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாமினை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
உடன் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) சோமசுந்தரம், மாநகராட்சி நகர்நல அலுவலர் பிரகாஷ் உட்பட பலர் உள்ளனர்.