fbpx
Homeபிற செய்திகள்உதகையில் நகர சபை கூட்டம்

உதகையில் நகர சபை கூட்டம்

தமிழக அரசின் உத்தரவுப்படி, நவம்பர் 1-ம் தேதி உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் முதன்முறையாக நகர வார்டு சபை கூட்டம் நடைபெறும் என அரசு அறிவித்திருந்தது.

அதன்படி, உதகை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முதல் கூட்டமாக உதகை நகராட்சி துணை தலைவர் ரவிகுமார் அவர்களின் 22-வது வார்டில் நடைபெற்றது.

கூட்டத்தில் 22-வது வார்டிற்கு உட்பட்ட புட்சர் தெரு, வில்லோபவுண்டு, மெயின் பஜார், அப்பர் பஜார், மருத்துவமனை சாலை, எல்க் ஹில் ஆகிய பகுதிகளை சார்ந்த பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

கூட்டத்தில்உதகை நகரமன்ற தலைவர் வாணீஸ்வரி, உதகை நகராட்சி ஆணையாளர் காந்திராஜ், வார்டு செயலாளர் சந்திரகுமார், வார்டு சபை உறுப்பினர்கள் வெங்கடேஷ், பரமேஸ்வரி, பெரியசாமி, சார்லஸ் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img