fbpx
Homeபிற செய்திகள்உதகையில் மரபியல் பல்வகைமை கண்காட்சி

உதகையில் மரபியல் பல்வகைமை கண்காட்சி

நீலகிரி மாவட்டம், உதகை சேரிங்கிராஸ் தோட்டக்கலைத் துறை வளாகத்தில், தோட்டக் கலைத்துறை சார்பில், மரபியல் பல்வகைமை கண்காட்சி (GENETIC BIODIVERSITY FAIR) விவசாயிகள் மேளா கடந்த 20-ம் தேதி துவக்கி வைக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் இக்கண்காட்சியை துவக்கி வைத்து பேசியதாவது:
தமிழகம் முழுவதும் பாரம்பரிய பயிர்களை மீட்டெடுக்கும் முயற்சியாக முன் னோர் செய்த இயற்கை விவ சாயத்தை ஊக்குவிக்கும் வகை யில், மரபியல் பல்வகைமை கண்காட்சி விவசாயிகள் மேளா நடத்த திட்டமிடப்பட்டது.

அதனடிப்படையில், மாவட்ட அளவில் அட்மா திட்டத்தின் கீழ் மரபியல் பல்வகைமை என்ற தலைப்பில் கிசான் மேளா மற்றும் பாரதிய பிரகிருதிக் கிரிஷி பத்ததி (BPKP) என்ற திட்டத்தின் கீழ் மூலிகைப் பூச்சி விரட்டி மற்றும் திரவ ஊட்டச்சத்து தயாரிப்பு பற்றிய செயல்விளக்கம் மற்றும் இயற்கை விவசாய முறைகளை பின்பற்றி பாரம்பரிய ரகங்களை பயிரிடுவது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

மாவட்டத்தில் பாரம்பரிய வகை காய்கறிகள், பழங்கள், மருத்துவ தாவரங்கள், பூக்கள் மற்றும் மசாலாப் பொருட்களை பூர்வீகமாகக் கொண்டு அதில் இருந்து மேம்படுத்தப்பட்ட ரகங்கள் உருவாக்கப்படுகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் 200 வகையான மருத்துவப் பயிர்கள், 175 வகையான ஆர்கிட் மலர்கள், 75 வகையான பூக்கும் மரங்கள் உட்பட 3,700 வகையான தாவரங் கள் நிறைந்த உயர்கோளம் ஆகும்.

பாரம்பரிய மருத்துவச் செடிகள், சிறுதானியங்கள், பயறு வகைகள் அதிகளவில் பயிரிடப் பட்டு வந்தன. பிற்காலத்தில் தோட்டப்பயிர்கள் மற்றும் வீரிய ரக காய்கறி பயிர்கள் அதிகளவில் பயிரிடப்பட்டதின் விளைவாக நீலகிரி மாவட்டத்தின் சிறப்புமிக்க பாரம்பரிய பயிர்கள் அழியும் நிலையில் உள்ளன. இதனை மேம் படுத்த வேண்டும் என்ற நோக்கில் அரசு இது போன்ற திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

தோட்டக்கலைத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் என்னென்ன என்பதனை விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

விவசாயிகள் பயிரிடும் பயிர்களை அதிக லாபத்திற்கு விற்பதற்காக வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்கள் தேவையான ஆலே £சனைகளை வழங்க வேண்டும்.

இந்த மரபணு கண்காட்சியினை மாவட்டம் முழுவதிலும் இருந்து 180 விவசாயிகளும், தமிழ்நாடு வேளாண்மை பல் கலைக்கழகத்தைச் சேர்ந்த 60 மாணவர்களும் கண்டு களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மூலிகை பூச்சி விரட்டி மற்றும் திரவ ஊட்டச்சத்து குறித்த செயல்விளக்க மேளாவில் 31 கிராமங்கள் மற்றும் மாநில தோட்டக்கலை பண்ணைகளில் இருந்து 466 விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதன் மூலம் விவசாயிகளுக் கும், மாணவ, மாணவிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே விவசாயிகள் மண்ணிற்கு ஏற்ற பயிர்களை அதிகளவில் விளைவித்து அனைவரும் பயன் பெற வேண்டும் என்றார் ஆட்சியர்.

பாரம்பரிய மூலிகை மருத்துவம் தேசிய அளவிலான தன்வந்திரி சான்றிதழ் பெற்ற காளியம்மாள், மாவட்ட ஆட்சியரிடம் சான்றி தழை காண்பித்து வாழ்த்து பெற்றார்.

தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் (பொ) ஷிபிலா மேரி, துணை இயக்குநர் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஜாயிலின் ஷோபியா, உதகை வட்டாட்சியர் ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img