fbpx
Homeபிற செய்திகள்உள்ளாட்சித் தேர்தல் வெற்றி: கருணாநிதி உருவப்படத்திற்கு கனிமொழி எம்.பி. மரியாதை

உள்ளாட்சித் தேர்தல் வெற்றி: கருணாநிதி உருவப்படத்திற்கு கனிமொழி எம்.பி. மரியாதை

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தூத்துக்குடி மாநகராட்சி உட்பட அ¬ னத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள், பேரூராட்சிகளில் அபார வெற்றி பெற்றது.

இதையொட்டி நேற்று (செவ்வாய்கிழமை) தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் வைக்கப்பட் டிருந்த கலைஞர் கரு ணாநிதியின் திருவுருவ படத்திற்கு திமுக மக ளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் தூத்துக்குடியில் உள்ள பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், குரூஸ் பர்னாந்து, பெருந் தலைவர் காமராஜர், வ. உ.சிதம்பரனார், மகாத்மா காந்தி, இந்திராகாந்தி ஆகியோரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அவர் மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச் சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாள ருமான கீதா ஜீவன், திமுக மாநில பொ துக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலாளர் ஆ னந்த சேகரன் மற்றும் நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img