தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று (17.10.22) காலை 5 மணி நிலவரப்படி வினாடிக்கு சுமார் ஒரு லட்சத்து 85 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வரத்து உள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து 7வது நாளாக சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தடை விதித்துள்ளது.
காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.