fbpx
Homeபிற செய்திகள்ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தின் கீழ் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் பணி- இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு...

ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தின் கீழ் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் பணி- இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தின்கீழ் (Master Plan)மேற்கொள் ளப்படவுள்ள பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு நேற்று முன்தினம் (அக்.30) ஆய்வு செய்தார்.

சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் டாக்டர் பி.சந்தரமோகன், மாவட்ட ஆட்சியர் ஜெ.மே கநாதரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

2021-2022-ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்போது “திருக்கோயிலுக்குப் பெருமளவில் வருகைதரும் பக்தர்களுக்கான முழுமையான அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த 40 முதுநிலைத் திருக்கோயில் களுக்கான ஒருங்கிணைந்த பெருந்திட்டம் (Master Plan) வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது”.

அதன்படி, இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக் கோயிலில் ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அறிவுரைகளை வழங்கிய அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வல்லமை பெற்ற அருள்மிகு இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோ விலுக்கு ஓர் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் பக்தர்கள் வருகிறார்கள். மு.க.ஸ்டா லின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்ற இதுபோன்ற திருக்கோயில்களை ஒருங்கி ணைந்த பெருந்திட்டத்தின் கீழ் மேம்பாடு செய்திட உத்தரவிட்டிருக்கிறார்.

அந்த வகையில் ஏற்கனவே திருச்செந்தூர் திருக்கோயில் பெருந்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு, ரூ.300 கோடி செலவில் அதாவது ரூ.200 கோடி எச்சிஎல் பங்குடனும், ரூ.100 கோடி இந்து சமய அறநிலையத்துறை மற்றும் உபயதாரர்கள் நிதியோடும் பணிகளை முதல்வர் தொடங்கிவைத்துள்ளார்.

அருள்மிகு பெரியபாளையத்தம்மன் திருக்கோயிலுக்கு ரூ.130 கோடி ரூபாயில் பணிகள் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டு, அந்த பெருந்திட்ட வரைவினை சிறு சிறு திருத்தங்களை சரிசெய்து தற்போது அந்த பணியையும் முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்.

திருத்தணி, ஸ்ரீரங்கம், சமயபுரம், மாரியம்மன், வயலூர் முருகன் பழனி தண்டாயுதபாணி, மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களிலும் பெருந்திட்ட பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவிலில் பெருந்திட்ட பணியை துறை செயலாளர் மேற்பார்வையில், ஆணையாளர் மற்றும் கூடுதல் ஆணையர்கள் கவனம் செலுத்தி பெருந்திட்ட வரைவை முதற்கட்டமாக தயாரித்து இருக்கிறார்கள். அதை இன்றைக்கு துறை செயலாளர், மாவட்ட ஆட்சியருடன் பார்¬ வயிட்டு இருக்கிறோம்.

குறிப்பாக இந்த பெருந்திட்ட விரைவில் சேர்க்கப்பட வேண்டிய பொருட்களாக மூன்று இடங்களில் நுழை வாயில்களை ஏற்படுத்த இருக்கிறோம். முக்கிய பாதையில் இருந்து திருக்கோவிலுக்கு வருகிற பாதை 600 மீட்டர் அளவிற்கு புதிய பாதையாக அமைக்க இருக்கிறோம்.

வரும் வழியில் இருக்கிற தரைமட்ட பாலம் உயர்மட்ட பாலமாக அமைக்கப்பட உள்ளது. இங்கு 98 விருந்து மண்டபங்கள், ஆடுகள் மற்றும் கோழிகளை நேர்த்திக்கடன் செலுத்த வருகிறவர்களுக்கு சுகாதார மான முறையில் இரண்டு எஸ்கலேட்டர்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது.

ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் பொங்கல் இடும் வகையில் மண்டபமும், பக்தர்கள் தங்குவதற்கு 40 குளிர் சாதன அறைகளும், 40 குளிர்சாதன மற்ற அறைகளும் அமைக்கப் படுகின்றன.

திருக்கோயிலில் இருக்கிற கடைகளை ஒரு பகுதியாக அமைத்து தந்து, வியாபார பெருமக்களுக்கு பாதிப்பு இல்லாத அளவில் குறைந்த வாடகையில், அதே நேரத்தில் வருகிற பக்தர்களுக்கு அதிக விலையில் பொருட்களை விற்கிறார்கள் என்ற நிலையில்லாமல், வியாபார பெருமக்களுக்கும் ஒரு பாதுகாப்பான சூழ்நிலை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறோம்.

ஏற்கனவே பெருந்திட்ட வரைவு திட்டத்தில் எடுத்துக்கொண்ட பணி களில் இப்போது கோயில் உள்ளே இருக்கிற உற்சவ மண்டபம் 40 லட்சம் ரூபாயிலும், முடிகாணிக்கை செலுத்துகிற மண்டபம் ரூ.2.25 கோடியிலும், மற்றொரு மண்டபம் 3 கோடி ரூபாயிலும் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

பெருந்திட்டப் பணி என்பது ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. முதல்வரிடம் ஒப்புதல் பெறப்பட்ட பிறகு அந்த பெருந்திட்டப் பணிகளை இன்னும் அதிக வேகத்தில் கொண்டு சென்று மூன்று ஆண்டுகளுக்குள் ஒட்டுமொத்தமாக இந்த திருக்கோவிலின் வடிவம் மாறி அமைக்கப்படும்.

பக்தர்கள் வருகிறபோது எல்லா நிலையிலேயேயும் இலகுவான தரிசனத்திற்கும், எத்தனை ஆயிரம் பக்தர்கள் ஒன்றாக வந்தாலும் தங்குவதற்கு உண்டான வசதிகள் இருக்கும். வாகனம் நிறுத்துமிடம் போன்ற அனைத்தையும் ஏற்படுத்தித் தருவதற்கு ஆலோசிக்கப்பட்டு இருக்கிறது.

பிரசித்தி பெற்ற நிலையில் உள்ள திருக்கோயில்களில் உள்ள அனைத்து வசதிகளும் கூடிய ஒரு திருக்கோயிலாக இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயிலை நிச்சயம் மாற்றிக் காட்டுவோம்.

ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.ரவிக்குமார், மதுரை மண்டல இணை ஆணையர் கே.செல்லதுரை, சாத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் நிர்மலா கடற்கரை ராஜ், திருக்கோயில் பரம்பரை அறகாவலர் ராமமூர்த்தி, செயல் அலுவலர் ஆர். கருணாகரன் உட்பட பலர் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img