fbpx
Homeபிற செய்திகள்கண் அழுத்த நோய் விழிப்புணர்வு பேரணி

கண் அழுத்த நோய் விழிப்புணர்வு பேரணி

உலக கண் அழுத்த நோய் வாரத்தை கொண்டாட, கோயமுத்தூர் சொசைட்டி ஆஃப் ஆப்தால்மிக் சர் ஜன்ஸ் (சிஎஸ்ஓஎஸ்) நேற்று (மார்ச் 13) கோவை மண்டல இந்திய மருத்துவ சங்கம் ஆகியவை சார்பில் ஆர்விஎஸ் நர்சிங் கல்லூரி மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் உதவி யுடன், கண் அழுத்த நோய் விழிப்புணர்வு பேரணியை நடத்தியது.

சிஎஸ்ஓஎஸ் தலைவர் டாக்டர் ரோட்னி, செயலாளர் டாக்டர் ராஜேஷ் பிரபு, பொருளாளர் டாக்டர் ஜெ. சரவணன், கோயம்புத்தூர் மண்டல இந்திய மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர் சத்யன், செயலாளர் டாக்டர் மகேஷ்வரன், பொருளாளர் டாக்டர் சீரமலிங்கம் உட்பட மூத்த உறுப்பினர்கள் முன்னிலையில் கோவை 6-வது ஏர்போர்ஸ் மருத்து வமனையின் கமாண்டிங் ஆபீசரும் நிர்வாக இயக்குனர் மருத் துவமனை நிர்வாகம் (எய்ம்ஸ்) டாக்டர் இனி யந்த் கபீர் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கோயமுத்தூர் சொ¬ சட்டி ஆஃப் ஆப்தால்மிக் சர்ஜன்ஸ் (சிஎஸ்ஓஎஸ்) தலைவர் டாக்டர் ரோட்னி, செய லாளர் டாக்டர் ரா ஜேஷ் பிரபு ஆகியோர் கூறுகையில், சாதாரண ஆரோக்கியமான கண் ஆக்வஸ் ஹ்யூமர் என்ற திரவத்தை சுரக்கிறது

அது சுரக்கும் விகிதத்திலேயே வடிகிறது. இதில் ஏற் றத்தாழ்வு ஏற்படும்போது கண்ணுக்குள் உள்ள அழுத்தம் அதிகரிக்கிறது, இது பார்வை நரம்பு மீது அழுத்தத்தை ஏற்படுத்தி பார்வை இழப்புக்கு வழி வகுக்கிறது.

இன்றைய கண் அழுத்த நோய் விழிப்புணர்வு ஓட் டம் ஆரம்பத்திலேயே கண் அழுத்த நோய் அறிகுறிகளை தெரிந்து கொள்ள மற்றும் அதைக் கட்டுப்படுத்தவும் கண் பரிசோதனை என்ற ஒரே வழியை பற்றி பொதுமக்களுக்கு வலியுறுத்துவதற்காக நடத்தப்பட்டது.

40 வயதிற்கு மேற்பட்டோர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஒற்றை தலைவலி கொண்டவர்கள் அடிக்கடி தங்கள் கண்ணாடிகளை மாற்றுபவர்கள், மைனஸ் பவர் லென்ஸ்களை உப யோகிப்பவர்கள், அடிக்கடி ஸ்டெராய்டுகள் பயன்படுத்துபவர்கள், மிக முக்கியமாக கண் அழுத்த நோய் கொண்ட குடும்ப வரலாற்றைக் கொண்டவர்கள், பொதுவாக கண் அழுத்த நோயினால் பாதிக் கப்படும் அதிக ஆபத்தில் உள்ளனர்.

கண் அழுத்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கும் மற்றும் சிகிச்சையையும் உறுதி செய்யும், இதன் மூலம் மீளா பார்வை இழப்பைத் தடுக்கிறது என்றனர்.

படிக்க வேண்டும்

spot_img