fbpx
Homeபிற செய்திகள்காவேரிப்பட்டினம் பேரூராட்சியில் சிறப்பு நகர சபை கூட்டம்

காவேரிப்பட்டினம் பேரூராட்சியில் சிறப்பு நகர சபை கூட்டம்

காவேரிப்பட்டினம் பேரூராட்சியில் தமிழக முதல்வர் வேண்டுகோள்படி சிறப்பு நகர சபா கூட்டம் முதல்முறையாக 2வது வார்டு விநாயகர் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் வட்டார மருத்துவ அலுவலர் தாமரைச்செல்வி, மருத்துவர் .சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தெருவிளக்கு ,சாலை வசதி, குடிநீர் பிரச்சனை, கழிப்பிட வசதி, ஆகியவற்றை குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக பிரமுகர் சீனிவாசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார் , நகர துணை செயலாளர் விஜயகுமார், இளங்கோவன், மருத்துவப் பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள், ஆசிரியர்கள், வார்டு உறுப்பினர்கள் கீதா,நித்யா, தமிழ்ச்செல்வி, கோகுல்ராஜ், மற்றும் சிவப்பிரகாஷ், பாரதிராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img