fbpx
Homeபிற செய்திகள்காஸ் சிலிண்டர் விலை ஏற்றம் எஸ்டிபிஐ கட்சி கண்டனம்

காஸ் சிலிண்டர் விலை ஏற்றம் எஸ்டிபிஐ கட்சி கண்டனம்

கியாஸ் சிலிண்டர் விலை ஏற்றம் தொடர் பாக எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் கி.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறி இருப் பதாவது:
ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் சமையல் மற்றும் கியாஸ் சிலிண்டர்களின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் ரூபாய்- 50 வரை ஏற்றம் என்பது சாமான்ய மக் களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இதே போல் பெட்ரோல் டீசல் விலையும் உயர்த்தக் கூடும் என்ற செய்தி கண்டிக்கத் தக்கது.

கடந்த சில நாட்களாக 5 மாநில தேர்தல்களை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல், மற்றும் சமயல் கியாஸ் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் கொண்டுவராத மத்திய அரசு தேர்தல் முடிந்த வுடன் மீண்டும் விலையை கடுமையாக உயர்த்துவது என்பது மக்களை ஏமாற்றும் செயலாக உள்ளது. இந்த செயல் கடும் கண்டனத்திற்கு உரியது.

எனவே உடனடியாக விலையை குறைப்பதோடு, விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img