fbpx
Homeபிற செய்திகள்கிடங்கு பயன்பாடு: விவசாயிகளுக்கு கூட்டுறவு துறை மூலம் பயிற்சி

கிடங்கு பயன்பாடு: விவசாயிகளுக்கு கூட்டுறவு துறை மூலம் பயிற்சி

கோவை மாவட்டம் துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாப னத்தில் கிடங்கு மேம்பாடு மற்றும் நெறிமுறை ஆணையம் மூலம் மதுரை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தால் கோவையில் உள்ள விவசாயப் பெருமக்களுக்கு கிடங்கு பயன்பாடு தொடர்பான பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதனை கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் எஸ்.பார்த்திபன் துவக்கி வைத்து உரையாற்றினார்.

மதுரை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய இயக்குநர் மற்றும் முதல்வர் கோபால்சாமி கிடங்கு பயன்பாடு தொடர்பாக பயிற்சியளித்தார்.

இப்பயிற்சியில் திரளான விவசாயிகள் மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img