திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார மோட்டார் வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கம் பெயர் பலகை திறப்பு விழா மற்றும் ஆலோசனைக் கூட்டம் சங்க தலைவர் கணபதி தலைமையில் நடைபெற்றது.
பெயர் பலகையை கௌரவத் தலைவர் கிளமெண்ட், ஆர்டிஆர் தேவதாஸ், சட்ட ஆலோசகர் எ.எம் சேகர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
விழாவில் செயலாளர் கண்ணன், பொருளாளர் புண்ணியகோட்டி, துணைத்தலைவர்கள் இக்பால், நாகராஜன், துணைச் செயலாளர்கள் முத்துக்குமரன், பிரபாகரன், இணைச் செயலாளர்கள் பாபு சையத், சபீர் முகமது, கௌரவ ஆலோசகர்கள் சீனிவாசன், குணசேகரன், பிரபாகரன் பாலு, சிவகுமார், சேகர், மன்ற காப்பாளர்கள் விநாயகம், உதயகுமார், ஜெயக்குமார், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.