fbpx
Homeபிற செய்திகள்சிக்கனமாக உற்பத்தி முறையை கையாள தொழில் நிறுவனங்களுக்கு வேண்டுகோள்

சிக்கனமாக உற்பத்தி முறையை கையாள தொழில் நிறுவனங்களுக்கு வேண்டுகோள்

தொழில் நிறுவனங்கள் சிக்க னமாக உற்பத்தி முறையைகையாள வேண்டும் என்று கோவை தொழில் வர்த்தக சபை கூட்டத்தில் மத்திய அரசின் முன்னாள் செயலர் ராஜீவ் கிர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்திய தொழில் வர்த்தக சபையில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.
இந்திய தொழில் வர்த்தக சபையின் கோவை தலைவர் ஸ்ரீராமலு தலைமை தாங்கினார்.

இந்திய மற்றும் வெளி நாடுகளுக்கிடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்து இந்திய அரசின் வர்த்தகத் துறையின் முன்னாள் செயலாளர் ராஜீவ் கிர் பேசியதாவது: தொழில் நிறுவனங்கள் உற்பத்தி பொருட்களை சிக்கன நடைமுறையில் உற்பத்தி செய்ய வேண்டும்.

இந்தியா மற்றும் பிற நாடு களோடு ஏற்பட்டுள்ள தொழில் கொள்கைகள் கடந்த 2001ம் ஆண்டு முதல் முரண்பாடாக உள்ளது.
தொழில் நிறுவனங்கள் மானியங்கள் கேட்பது, தள்ளுபடி கேட்பதை வழக்கமாக வைத்துள்ளது.

இவற்றை மாற்று சிந்தனையாக தொழிற்சாலைகளில் உற்பத்தி பொருட்களை சிக்கனமாக நாம் நடைமுறைப்படுத்தினால், வெற்றி பெறலாம்.
மோட்டார் வாகன உற்பத்தியில் உலகிலேயே சிறிய கார் உற்பத்தியில் முதலிடம் பெற்று வருகிறோம்.

பிற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியா சிறிய ரக கார்களை குறைந்த விலையில் தரமாக தயாரித்து மக்களுக்கு ஏற்ற வசதிக்கேற்ப உற்பத்தி செய்து வருவது பெருமைப்படக்கூடியது என்றார்.

தொழில் துறையில் தற்போது உள்ள சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. செயலாளர் அண்ணா மலை நன்றி கூறினார்.

கோவையைச் சேர்ந்த தொழில் நிறுவன அதிபர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img