ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை பாதுகாக்கும் வகையில் பிரத்யேக இரு சக்கர ரோந்து வாகனங்களை காவல்துறை மேற்கு மண்டல தலைவர் சுதாகர், கோவை சரக காவல் துறை தலைவர் முத்துசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
பின் மாவட்ட காவல் துறை கண்காணிப்பு அலுவலகத்தில் அமைக்கப்பட்டு உள்ள தேநீர் விடுதியை திறந்து வைத்தனர். நிகழ்வில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆசிஸ்ராவத் மற்றும் அதிகாரிகள், காவலர்கள் பங்கேற்றனர்.