fbpx
Homeபிற செய்திகள்சூலூரில் தெற்கு மாவட்ட திமுக புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

சூலூரில் தெற்கு மாவட்ட திமுக புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

கோவை தெற்கு மாவட்ட திமுக புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் சூலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கோவை தெற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள தளபதி முருகேசன் முன்னிலையில் புதிதாக தேர்ந் தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மன்ன வன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் சந்திரன், தெற்கு மாவட்ட திமுக துணைத் தலைவர் பி.கே. சாமிநாதன், பொதுக்குழு உறுப்பினர் ரகுதுரைராஜ் ஆகியோர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

அப்போது பேசிய தளபதி முருகேசன், சூலூர் உட்பட கோவை தெற்கு மாவட்டத்தில் கழக தலைவர் தளபதி அவர்களின் ஆணைப்படி அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு கோவை மாவட் டத்தை திமுகவின் கோட்டையாக மாற்றிக் காட்டுவோம் என கேட்டுக்கொண்டார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பட்டணம் செல்வகுமார், பேரூராட்சி தலைவர்கள் செல்வராஜ், தேவிமன்னவன், புஷ்பலதாராஜ கோபால், சிபி செந்தில், கலங்கல் சிவகுமார் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி தலைவர்கள், நகர, பேரூர் கழக நிர்வாகிகள் கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் சன்சுப்பிரமணியம் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img