fbpx
Homeபிற செய்திகள்டீ பியர்ஸ்- சுமங்கலி ஜூவல்லர்ஸ் ஒப்பந்தம்

டீ பியர்ஸ்- சுமங்கலி ஜூவல்லர்ஸ் ஒப்பந்தம்

உலகின் முன்னணி மற்றும் நம்பகமான வைர நகைபிராண்டான, டீ பியர்ஸ் பார்எவர்மார்க், தென்னிந்தியாவில் நகை வர்த்தக நிறுவனமான சுமங்கலி ஜூவல்லர்ஸ் உடன் இணைந்து செயல்பட ஒப்பந்தம் செய்துள்ளது.

தங்க நகை மற்றும் வைர நகை வர்த்தகத்தில் மிகவும் ஸ்திரமான இரு பெரும் நிறுவனங்கள் ஒன்றிணைந்து தனித்துவமிக்க மிகச் சிறப்பான தரமான வைர நகைகளை அளிக்க உள்ளன.

நிகழ்ச்சியில், நடிகை அதுல்யா ரவி பேசும் போது, அழகிய வைர நகைகள் என்றாலே அது டீ பியர்ஸ் பார்எவர்மார்க் தயாரிப்புகள்தான். ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் வைர நகை என்பது மிகவும் மறக்க முடியாத தருணமாகும்.

அந்த வகையில் இன்று எனது வாழ்வில் என்றென்றும் மறக்க முடியாத நாளாகும். டீ பியர்ஸ் பார்எவர்மார்க் தயாரித்த மிக அழகிய நகைகளைக் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த நகைகள் அனைத்துமே மிகவும் அரிய வகை, கைகளால் அழகுற வடி வமைக்கப்பட்டவை. கோவையைச் சேர்ந்த பெண்கள் இயற்கையான, நம்பகமான ஜொலிக்கும் வைர நகைகளை அணிந்திருக்கிறோம் என்று பெருமையாக கூறிக் கொள்ளலாம் என்றார்.

சுமங்கலி ஜூவல்லர்ஸ் நிர்வாக இயக்குநர் வி. செந்தில்குமார் பேசு கையில், சர்வதேச அளவில் தரமான வைர நகை பிராண்டாகத் திகழும் டீ பியர்ஸ் பார்எவர்மார்க் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து செயல்படுவது

மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த கலவையாக நவீன மற்றும் பாரம்பரிய வடிவிலான நகைகள் கிடைப்பதற்கு வழியேற்பட்டுள்ளது என்றார்.

டீ பியர்ஸ் பார்எவர் மார்க் நிறுவன துணைத் தலைவர் அமித் பிரதி ஹரி பேசுகையில், கோவையில் வசிக்கும் மக்கள் இனி வியத்தகு டீ பியர்ஸ் பார்எவர்மார்க் ஜூவல்லரி வடிவமைப்பிலான நகைகளை சுமங்கலி ஜூவல்லர்ஸில் வாங்கலாம்.

நகை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுடன் வெறு மனே ஒப்பந்தம் செய்வ தில்லை. இதற்கென சர்வதேச அளவில் வகுக் கப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளுக்கும் பொருந்தி வரக்கூடிய நிறுவனங்களை மட்டுமே தேர்வு செய்து ஒப்பந்தம் செய்யப்படுகிறது.

எங்களது தயாரிப்புகளின் கலெக்ஷனை சுமங்கலி ஜூவல்லர்ஸ் மூலமாக விற்பனை செய்வதன் மூலம் இரு நிறுவனங்களிடையிலான உறவு மேலும் வலுப்பெறும் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img