ராமநாதபுரம் மாவட் டம் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தனுஷ்கோடி முதல் அரிச்சல்முனை வரை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது.
மக்கள் நலமாகவும், வளமாகவும் வாழ்ந்திட தூய்மையான சுற்றுச்சூழல் மிகவும் அவசியமாகும்.
நீர், காற்று, நிலம் ஆகியவற்றை சீர்படுத்துவதிலும், தீவிர வானிலை மாற்ற நிகழ் வுகள் மற்றும் கால நிலை மாற்றத்திற்குரிய தாக்கங் களை குறைப்பதிலும், சூழல் அமைப்புகள் முக் கியமான அம்சங்களாக விளங்குகின்றன.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை வளங்களையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பி னையும் மேம்படுத்திட தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தனுஷ்கோடி முதல் அரிச்சல்முனை வரை பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை, மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத் கொடிய சைத்து துவக்கி வைத்து பங்கேற்றார்.
அரிச்சல்முனையில் கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட் டினை தவிர்த்து, கடல் உயிரினங்களை பாது காக்க கடற்கரையில் அமைக் கப்பட்டுள்ள விழிப்புணர்வு மணல் சிற்பத்தை ஆட்சியர் பார்வையிட்டார்.
அரிச்சல்முனை கடற் கரை பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து மா பெரும் தூய்மை பணியி னை துவக்கி வைத்து, சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் நெகிழியை தவிர்ப்போம், சுற்றுச்சூழலை பாதுகாப் போம், மீண்டும் மஞ்சப்பை போன்ற வாசகங்கள் அடங் கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை ஆட் சியர் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து மண்டபம் ஊராட்சி ஒன்றியம் தங்கச்சிமடம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வனத்துறை மூலம் கடற்கரை பகுதிகளில் சேகரிக்கப்பட்ட நெகிழி கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்காக தங்கச்சிமடம் ஊராட்சியிடம் ஒப்படைக் கப்பட்டது.
நெகிழி கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு ஒப்படைத்ததற்காக தங்கச் சிமடம் ஊராட்சி சார்பில், ரூபாய் 10 ஆயிரத்திற்கான காசோலை வனத்துறைக்கு வழங்கப்பட்டது.
தூளாக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை விற்பனை செய்ததற்காக ரூபாய் 20 ஆயிரத்திற்கான காசோலை தங்கச்சிமடம் ஊராட்சிக்கு வழங்கப்பட்டது.
பாம்பன் ஊராட்சி சார்பில் தயாரிக்கப்பட்ட இயற்கை கரிம உரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப் பட்டன.
நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிர வீன் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கா மாட்சிகணேசன், வன உயிரின காப்பாளர் ஜக் தீஷ் பகான் சுதாகர் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஷேக்மன்சூர், உதவி இயக் குநர் (ஊராட்சிகள்) பரம சிவன், ராமேஸ்வரம் வட்டாட்சியர்கள் மார்ட் டின், அப்துல் ஜப்பார், மாவட்ட சுற்றுலா அலு வலர் வெங்கடாச்சலம், ராமேஸ்வரம் நகராட்சி ஆணையாளர் மூர்த்தி, மண்டபம் ஊராட்சி ஒன்றி ய வட்டார வளர்ச்சி அலுவலர் கணேஷ் பாபு உள்ளிட்டோர் பங்கேற் றனர்.