fbpx
Homeபிற செய்திகள்தர்மபுரி ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவர், தேர்வில் சாதனை

தர்மபுரி ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவர், தேர்வில் சாதனை

2021-2022ம் ஆண்டு பல்கலைக்கழக அளவிலான தேர்வில், தர்மபுரி ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவன் எம். சிவசங்கர் முதலிடம் பெற்றார்.
பாராட்டு விழாவுக்கு கல்லூரி தாளாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.

துணை சேர்மன் மருத்துவர் அசோக்குமார், கல்லூரி சேர்மன் மருத்துவர் மோகனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக மாவட்ட மலேரியா அலுவலர் சுப்பிரமணி, சுகாதார மேற்பார்வையாளர் மதியழகன், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு மேற்பார்வையாளர் உலகநாதன், தேசிய தொழுநோய் துறையின் சார்பாக சுகாதார ஆய்வாளர்கள் இளவரசு, கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர்.

2021-2022-ம் ஆண்டிற்கான பல்கலைக்கழக அளவிலான தேர்வில் முதலிடம் பிடித்த Diploma in Operation Theatre Technology பயிலும் மாணவன் எம். சிவசங்கர் 10 பாடப் பிரிவில் 939/1000 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

கல்லூரி பேராசிரியர்கள் மகேஸ்வரி, ரஞ்சிதா, காமதேனு, முனைவர் பொன்னம்பலம் ஆகியோர் மாணவருக்கு நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினர்.

இந்த துறையை தேர்ந்தெடுத்த நோக்கம் ஏழை, எளிய மக்களுக்கு பணியாற்ற வேண்டும். சின்ன வயதில் இருந்து எனக்கு மருத்துவத்துறை ரொம்ப பிடித்தமான துறை என்றார் மாணவர் எம்.சிவசங்கர்.

மாணவருக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பதக்கம், நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
நிர்வாக அலுவலர் ஜோதிபாசு நன்றி கூறினார்.
மக்கள் தொடர்பு அலுவலர் லாவண்யா தொகுத்து வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img