திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை புனித அந்தோணியார் கல்வியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 140 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் மற்றும் வள்ளியூரில் உள்ள யுனிவர்சல் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 180 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.