fbpx
Homeபிற செய்திகள்நன்றி, மன்னிப்பு என்ற இரண்டே இரண்டு வார்த்தைகளால் உலகை வெல்ல முடியும்- தூத்துக்குடி கல்லூரி விழாவில்...

நன்றி, மன்னிப்பு என்ற இரண்டே இரண்டு வார்த்தைகளால் உலகை வெல்ல முடியும்- தூத்துக்குடி கல்லூரி விழாவில் எஸ்.பி. பாலாஜி சரவணன் பேச்சு

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் நாட்டுநலப்பணித் திட்டம் (அணி எண் 54 மற்றும் 56) சார்பில், தூத்துக்குடி அருகேயுள்ள முள்ளக்காடு மற்றும் சவேரியார்புரம் பகுதியில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

இதற்கான தொடக்க விழா முள்ளக்காடு கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, காமராஜ் கல்லூரி முதல்வர் து. நாகராஜன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் லோக. பாலாஜி சரவணன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை தொடக்கி வைத்து பேசினார்.

அவர் பேசுகையில், மாணவ, மாணவிகள் அனைவரும் எப்போதும் நேர்மறை எண்ணத்துடன் இருக்க வேண்டும் என்றும், நன்றி மற்றும் மன்னிப்பு என்ற இரண்டு வார்த்தைகளால் உலகை வெல்ல முடியும் என்றும் கேட்டுக் கொண் டார்.

மேலும், தற்போதைய காலக்கட் டத்தில் மாணவ, மாணவிகளுக்கு கைப்பேசி என்பது அவசியமான ஒன் றாகிவிட்டது என்றும் அதை சரியான முறையில் பயன்படுத்தி தங்களை மாணவ, மாணவிகள் முன்னேற்றிக் கொள்ள வேண்டும் என்றும் காவல் கண்காணிப்பாளர் லோக. பாலாஜி சரவணன் கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில், முள்ளக்காடு ஊராட்சி மன்றத் தலைவர் கோபிநாத் நிர்மல், கோவங்காடு ஊராட்சி முன்னாள் தலைவர் விஜய சங்கர், கோயில் தர்மகர்த்தா சின்னராஜா, கல்லூரி பழைய மாணவர் சங்க நிர்வாகி சிவாகர் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, தூத்துக்குடி சாரா கலைக்குழுவினரின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

மார்ச் 29 ஆம் தேதி வரை நடைபெறும் முகாமில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி, சிறுசேமிப்பு விழிப்புணர்வு, ஆரோக்கிய இந்தியா திட்ட விழிப்புணர்வு, பிளாஸ்டிக் இல்லாத தூத்துக்குடி மற்றும் மஞ்சள் பை விழிப்புணர்வு, போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

முகாமுக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவ லர்கள் ஆ. தேவராஜ், பா,. பொன்னுத்தாய் மற்றும் மாணவ பிரதநிதிகள் சந்தனகுமார், அனிதா, சோனா, காயத்திரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img