fbpx
Homeபிற செய்திகள்பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்சனைக்கு மரங்கள் வளர்ப்பது மட்டுமே சிறந்த தீர்வு- விவசாய சங்கத் தலைவர்...

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்சனைக்கு மரங்கள் வளர்ப்பது மட்டுமே சிறந்த தீர்வு- விவசாய சங்கத் தலைவர் செல்லமுத்து பேச்சு

நல்ல மழைக்கு ஈஷா வழங்கி இருக்கும் 8 கோடி மரக்கன்றுகளும் ஒரு காரணம் என்று காவேரி கூக்குரல் இயக்க விழாவில், தமிழக விவசாய சங்கத் தலைவர் செல்லமுத்து தெரிவித்தார்.

காவேரி கூக்குரல் இயக்கமும் கோவை கட்டுனர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கம் இணைந்து கோவையைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக இரண்டாம் தவணையாக 1 லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

காவேரி கூக்குரல் இயக்கத்தின் நோக்கம் அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நடுவதாகும். அதன் ஒரு பகுதியாக தொண்டாமுத்தூர் பகுதியின் பசுமைப்பரப்பை அதிகரிக்கவும், நிலத்தடி நீரை மேம்படுத்தவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும் “பசுமை தொண்டாமுத்தூர்” என்ற இயக்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது.

முதற்கட்டமாக 1 லட்சம் மரக்கன்றுகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இரண்டே மாதங்களில் அந்த இலக்கு அடையப்பட்டது. அதன் இரண்டாவது தவணையாக அடுத்த 1 லட்சம் மர க்கன்றுகள் வழங்கும் விழா சீங்கப்பதி கிராமத்தில் நடைபெற்றது.

காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் பேசியதாவது: காவேரி கூக்குரல் இயக்கம் அதன் பணிகளுக்காக ஐநா உள்ளிட்ட பல சுற்றுச்சூழல் அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

காவேரி கூக்குரல் இயக்கம் தொண்டாமுத்தூரை மாதிரி பகுதியாக உருவாக்கும் நோக்கத்தில் இதே நோக்கத்துடன் உள்ள சமூக இயக்கங்களுடன் இணைந்து கடந்த மூன்று மாதங்களிலேயே 1 லட்சம் மரக்கன்றுகள் நட்டுள்ளோம் என்றார்.

தமிழக விவசாயிகள் சங்கத்தலைவர் செல்லமுத்து பேசியதாவது:
உலகம் முழுக்க பருவநிலை மாற்றத்தால் பல பிரச்சினைகள் உருவாகியுள்ளன. இதற் கான ஒரே தீர்வு மரங்கள் வளர்ப்பது மட்டுமே.

மரங்கள் நடுவது மக்களுக்கான சேவை. மக்களுக்கு என்பது மகேசனுக்கு சேவை செய்வது போலாகும். எனவே இதை செய்துகொண்டிருக்கும் ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கத்தினர் சிறப்பான செயலைச்செய்து கொண்டிருக்கிறார்கள். தீபாவளி, பொங்கல், திருமணம் உள்ளிட்ட உங்களின் வீட்டு விசேஷங்களுக்கு மரக்கன்றுகளை நடுங்கள்.

இப்போது நல்ல மழை பெய்யும் சூழல் உள்ளது. இதற்கு ஈஷா நட்டிருக்கும் இந்த 4 கோடி மரங்களும் ஒரு காரணம் என்று உறுதியாக சொல்லலாம். நிரந்தரமற்ற இந்த வாழ்க்கையில் மரங்கள் நடுவது நம் பெயர் சொல்ல வேண்டும். எனவே இந்த லட்ச மரங்கள் மட்டுமல்ல இன்னும் கோடி மரங்கள் நட வேண்டுமென வாழ்த் துகள் என்றார்.

இந்த பகுதி மட்டுமின்றி மற்ற பகுதி விவசாயிகளுக்கும் 30-க்கும் மேற்பட்ட ஈஷா நாற்றுப் பண்ணைகளில் 14 வகைக்கும் மேற்பட்ட டிம்பர் மரக்கன்றுகளை ரூ.3/-க்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

கோவை கட்டுனர்கள் மற்றும் ஒப்பந் ததாரர்கள் சங்கத் தலைவர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார்.

கிருஷ்ணா கல்வி குழுமத்தின் நிறுவனத்தின் சார்பாக ஆதித்யா, செல்வம் ஏஜென்சீஸ் நிர்வாக இயக்குனரும், கோவை வர்த்தக சபையின் முன்னாள் தலைவருமான நந்தகுமார், வெள்ளியங்கிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் குமார், CEBACA சமூகப் பிரி வின் வள்ளுவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img