fbpx
Homeபிற செய்திகள்பாராளுமன்ற தேர்தலுக்கு முன் வன்னியர் சங்கத்தை வலுப்படுத்த மாநில தலைவர் வேண்டுகோள்

பாராளுமன்ற தேர்தலுக்கு முன் வன்னியர் சங்கத்தை வலுப்படுத்த மாநில தலைவர் வேண்டுகோள்

தர்மபுரி மாவட்ட வன்னியர் சங்க ஆலோசனை கூட்டம், வன்னியர் சங்க மண்டபத்தில் நடந்தது. வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழி தலைமை தாங்க, தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் வன்னியர் சங்க நிர்வாகிகள் தேர்தலுக்கான விருப்பமனுவை பெற்றுக்கொண்டு பு.தா.அருள்மொழி பேசியதாவது:

தற்போது தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து நிர்வாகிகளும், வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் அனைத்து கிளைகளிலும் சங்கத்தை பலப்படுத்த உழைக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் காவிரி ஆறு பாய்ந்தாலும், மாவட்டத்திற்கு எந்தவொரு பயனும் இல்லை.

மாவட்ட மக்களின் விவசாயத்திற்கு காவிரி ஆறு எந்தவிதத்திலும் பயன்படவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் உழவர் பேரியக்க மாநில செயலாளர் வேலுச்சாமி, மாநில துணைத்தலைவர் பாடி செல்வம், கொள்கை விளக்க அணி தலைவர் பாரிமோகன், இளைஞர் அணி மாநில செயலாளர் முருகசாமி, மாநில வன்னியர் சங்க செயலாளர் அரசாங்கம், மாநில துணைத்தலைவர் சாந்தமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, மாவட்ட அமைப்பு செயலாளர் சண்முகம், மாவட்ட அமைப்பு தலைவர் கிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுதா கிருஷ்ணன், பென்னாகரம் ஒன்றிய குழு தலைவர் ராமகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் சரவணகுமாரி, வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img