fbpx
Homeபிற செய்திகள்பித்தியன் விளையாட்டு சர்வதேச குழு தமிழ்நாடு -புதுச்சேரி தலைவராக சூலூர் சிவகுமார் நியமனம்

பித்தியன் விளையாட்டு சர்வதேச குழு தமிழ்நாடு -புதுச்சேரி தலைவராக சூலூர் சிவகுமார் நியமனம்

கிரேக்க நாட்டின் நான்கு பழம்பெரும் விளையாட்டுகளில் ஒன்று பித்தியன் விளையாட்டு. ஒலிம்பிக் விளையாட்டிற்கு இணையாக முக்கியத்துவம் தரக் கூடிய விளையாட்டுப் போட்டியாக இந்த பித்தியன் விளையாட்டு கருதப்படுகிறது.

இந்த விளையாட்டின் அறிவுசார் சொத்துரிமைகள் இந்தியாவில் பிஜேந்தர் கோயல் முன்னாள் ஜார்கண்ட் மாநில அமைச்சர் மற்றும் சர்வேதேச பித்தியன் அமைப்பின் நிறுவனர் பதிவு செய்துள்ளார்.

இதுவரை குறைந்தது 80 நாடுகளின் முக்கிய பிரதிநிதிகள் இந்த சர்வதேசக் குழுவில் இணைந்துள்ளனர். இந்த சர்வதேசக் குழுவின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் சிறப்பு பிரதிநிதியாக விஜயராஜையும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் தலைவராக தமிழாய்வு அறக்கட்டளை யின் அறங்காவலர் சூலூர் சிவகுமாரை நியமித்துள்ளனர்.

இந்த சர்வதேச விளையாட்டுக் குழுவின் மூலம் நம் தமிழ்நாட்டின் தொன்மையான விளையாட்டு, கலை, இலக்கியங்கள் போன்றவற்றை உலக நாடுகள் மத்தியில் கொண்டு செல்ல மற்றும் அவர்களது விளையாட்டு மற்றும் மரபு சார் கலைகளை நமது நாட்டில் பகிர்ந்து கொள்ள பெரும் வாய்ப்பாக அமையும்.

படிக்க வேண்டும்

spot_img