fbpx
Homeபிற செய்திகள்பெண்களின் ஆரோக்கியத்தில் கொரோனாவின் தாக்கம்- வேலூர் நறுவீ மருத்துவமனையில் கருத்தரங்கு

பெண்களின் ஆரோக்கியத்தில் கொரோனாவின் தாக்கம்- வேலூர் நறுவீ மருத்துவமனையில் கருத்தரங்கு

வேலூர் நறுவீ மருத்துவமனையில் தைராய்டு நோய் பாதிப்புகள் மற்றும் பெண்களின் ஆரோக்கியத்தில் கொரோனாவின் தாக்கம் பற்றிய கருத்தரங்கம் நடந்தது.

தொடர் மருத்துவ கல்வித் திட்டத்தின் கீழ், நறுவீ மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ சங்கம் வேலூர் கிளை இணைந்து நடத்திய கருத்தரங்கில், வீரிய தைராய்டு நோய் பாதிப்புகள் மற்றும் பெண்களின் ஆரோக்கியத்தில் கொரோனாவின் தாக்கம் ஆகிய தலைப்புகளில் முன்னணி மருத்துவ நிபுணர்கள் கருத்துரை வழங்கினர்.

இந்திய மருத்துவ சங்கத்தின் வேலூர் கிளை புரவலரும் நறுவீ மருத்துவமனை தலை வருமான முனைவர் ஜி.வி. சம்பத் கருத்தரங்கு மலரினை வெளியிட்டார்.
இந்திய மருத்துவ சங்கத்தின் வேலூர் கிளை துணைத் தலைவர் டாக்டர் நிலேஷ் வரவேற்றார்.

நறுவீ மருத்துவமனை செயல் இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி, நறுவீ மருத்துவமனை வசதிகள் மற்றும் செயல்பாடுகள் பற்றி விளக்கினார்.

வீரிய தைராய்டு நோய் பாதிப்புகள் பற்றி நறுவீ மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் தலைவர் டாக்டர் அரவிந்தன் நாயர், பெண்களின் ஆரோக்கி யத்தில் கொரோனா நோய் தாக்கம் பற்றி மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர் ஜெயசீலா காமராஜ் ஆகியோர் பேசினர்.

கருத்தரங்கின் நோக்கம் பற்றி இந்திய மருத்துவ சங்கத்தின் வேலூர் கிளை செயலாளர் டாக்டர் தானே குமார் கூறினார். இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் மதன் மோகன், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் கோமதி, நறுவீ மருத்துவமனை இயக்குநர் டாக்டர் திலிப் மத்தாய், தினேஷ் மருத்துவமனை டாக்டர் மணி இளங்கோ, கீதா மருத்துவமனை டாக்டர் சதீஷ் குமார், பாபா மருத்துவமனை டாக்டர் சபிதா லோகநாதன், சாரதா நர்சிங் ஹோம் டாக்டர் சுஜாதா, சங்கரி மருத்துவமனை டாக்டர் முரளி, ஆர்.எம். மெடிக்கல் சென்டர் டாக்டர் ரவிசந்திரன், நறுவீ மருத்துவமனை தலைமை இயக்குதல் அலுவலர் மணிமாறன் பொது மேலாளர் நித்தின் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்திய மருத்துவ சங்க வேலூர் கிளை பொருளாளர் டாக்டர் திலகவதி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img