fbpx
Homeபிற செய்திகள்பெ.நா.பாளையத்தில் இலவச மருத்துவமுகாம்

பெ.நா.பாளையத்தில் இலவச மருத்துவமுகாம்

பெரியநாயக்கன்பாளையத்தில் ஸ்ரீராம கிருஷ்ணா மருத்துவமனை சார்பில் இலவச பொது மற்றும் பல் மருத்துவமுகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம், உயிரியல் மருத்துவத்துறை வெளிச்சேவை அமைப்பு, பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி, பெ.நா.பாளையம் தமிழ்சங்கம் ஆகியன இணைந்து 7 வது வார்டு, விவேகானந்தபுரம் சமுதாயக் கூடத்தில் ஏற்பாடு செய்திருந்த இம்முகாமின் தொடக்க நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் உமாதேவி, வார்டு கவுன்சிலர் வி.சவுந்தர்யா, நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரூராட்சிமன்றத் தலைவர் வெ.விஷ்வபிரகாஷ் சிறப்பு விருந்தி னராகக் கலந்து கொண்டு முகாமைத் தொடக்கி வைத்தார். பின்னர் நடந்த மருத்துவ முகாமில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் பல் மருத்துவமனையைச் சேர்ந்த பொது மருத்துவர் கிஷோர், பல் மருத்துவர் அருண் சைமன் தலைமை யிலான மருத்துவக்குழுவினர் முகாமில் பங்கேற்ற 123 பொதுமக்களுக்கு தகுந்த பரிசோதனைகள் செய்து ஆலோசனை களையும் வழங்கினர்.

இதில் 19 பேருக்கு பல் தொடர்பான சிகிச்சையளிக்கப்பட்டது. நாட்டு நலப்பணித் திட்ட தலைவர் கேசவசாமி, பேரூராட்சி மன்ற கவுன் சிலர்கள் பாலகிருஷ்ணன், வளர்மதி ஆறுச்சாமி, தமிழ்ச்சங்கத்தின் செயலாளர் கனகசுப்பிரமணியம், மருத்துவ மாணவிகள் மதுமிதா, இந்துமதி, லக்சணா, ஹரிணி, ஹர்ஷ்வர்த்தினி, ஹர்ஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை வார்டு கவுன்சிலர் வி.சவுந்தர்யா, உயிரியல் மருத் துவத்துறையின் துணைப் பேராசிரியர்கள் சிவசக்தி, ராஜலட்சுமி ஆகியோர் செய் திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img