fbpx
Homeபிற செய்திகள்பொன்னேரியில் தென்னிந்திய அளவிலான இறகுப்பந்து போட்டி

பொன்னேரியில் தென்னிந்திய அளவிலான இறகுப்பந்து போட்டி

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் திலீப் விளையாட்டு மையத்தில் தென்னிந்திய அளவிலான இறகு பந்து போட்டிகள் நடைபெற்றது. தமிழகம், ஆந்திரா பகுதிகளில் இருந்து 150 இறகுப்பந்து அணிகள் கலந்து கொண்டன.

இந்த போட்டிகளை தலைமை பயிற்சியாளர் புனிதராஜ் துவக்கி வைத்தார்.
இதில் இளையோர் ஆண்களுக்கான போட்டியில் சோட்டு -தர்மா இரட்டையர் அணி வெற்றி பெற்றது.

இரண்டாவதாக ராமதாஸ் – ஹரி ஜோடியும், 35 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான போட்டியில் விஜய் பாபு – விக்னேஷ் ஜோடி வெற்றியும் தர்மா – சஃபிக் அணி இரண்டாவதாகவும், 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான போட்டியில் விஜய் – கணேஷ் அணி முதலாவதாகவும், ஹபீப் – இருதயராஜ் அணி இரண்டாவதாகவும் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் ரொக்கப்பணம் ரூ.10,000 வழங்கப்பட்டது. இதனை திலீப் ஸ்போர்ட்ஸ் அகாடெமி நிறுவனர் பக்தவச்சலம் வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் செய்தார்.

படிக்க வேண்டும்

spot_img