fbpx
Homeபிற செய்திகள்பொன்னேரி நாடார்கள் சங்கம் சார்பில் சுப்பிரமணி நாடார் நினைவு கல்வெட்டு திறப்புவிழா

பொன்னேரி நாடார்கள் சங்கம் சார்பில் சுப்பிரமணி நாடார் நினைவு கல்வெட்டு திறப்புவிழா

பொன்னேரி அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு சுப்பிரமணிய நாடார், தனக்கு சொந்தமான 7.5 ஏக்கர் நிலத்தை கடந்த 1944ம் வருடம் தானமாக வழங்கியதற்கான நினைவு கல்வெட்டு பள்ளி வளாகத்தில் இருந்தது.

நாளடைவில் இது சிதிலமடைந்து போனதால், அதை பொன்னேரி வட்டார நாடார்கள் சங்கம் சார்பாக புதுப்பித்து புனரமைக்கப்பட்டு சுப்பிரமணிய நாடார் குடும்பத்தினர் சார்பில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு பொன்னேரி வட்டார நாடார் சங்க தலைவர் நடராஜன் நாடார், வேல்மாரியப்பன் நாடார், சந்தனகுமார் நாடார், முருகன்நாடார், தங்கராஜ்நாடார், பெருமாள் நாடார், துரையரசன் நாடார், பால்பாண்டியன் நாடார், மில்ட்டன் நாடார், அருள் நாடார், மதனகோபால் நாடார், முத்து குமார் நாடார், பெரியசாமி நாடார், ராமையா தாஸ் நாடார், பாஸ்கர்நாடார், நாடார் சங்க உறுப்பினர்கள் மற்றும் சுப்பிரமணிய நாடார் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் போது பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாண வர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப் பட்டது.

படிக்க வேண்டும்

spot_img