fbpx
Homeபிற செய்திகள்பொள்ளாச்சியில் தனிஷ்க் ஜூவல்லரி புதிய கிளை திறப்பு

பொள்ளாச்சியில் தனிஷ்க் ஜூவல்லரி புதிய கிளை திறப்பு

டாடா குழுமத்தின் தனிஷ்க் ஜூவல்லரியின் புதிய கிளை பொள்ளாச்சி-கோவை சாலையில் திறக் கப்பட்டது.

புதிய கிளையை தனிஷ்க் ஜூவல்லரியின் ரீடெயில் தலைவர் விஜேஸ்ராஜன், தமிழகரீடெயில் தலைவர் நரசிம்மன், அம்பாள் குரூப்ஸ் உரிமையாளரும், கிளை உரிமையாளருமான அசோகன் முத்துசாமி ஆகி யோர் திறந்து வைத்தனர்.

தனிஷ்க் ஜூவல்லரியின் ரீடெயில் தலைவர் விஜேஸ்ராஜன், தமிழக ரீடெயில் தலைவர் நரசிம்மன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த நிறுவனம் டாடா நிறுவனத்தின் ஓர் அங்கமாகும். நாடு முழுவதும் 220 நகரங்களில் 385 கிளைகள் உள்ளன.

தமிழகத்தில் 45 கிளைகள் உள்ளன. கோவை நகரில் 2 கிளைகளும் பொள்ளா ச்சியில் இந்த புதிய கிளையும் செயல்படுகிறது.
3ஆயிரம் சதுரடி பரப்பளவில், 2 ஆயிரத் திற்கு மேற்பட்ட டிசைன் கள் எங்களிடம் உள்ளன.

எக்ஸ்சேஞ்ச்க்காக வருபவர்களுக்கு 100 சதவீத தொகையை கொடுக் கிறோம். கிளை திறப்பின் அறிமுக சலுகையாக தங்க நகைகள் கிராமுக்கு ரூ.75 தள்ளுபடியும், வைர நகைகளுக்கு 20 சதவீதம் வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

தங்கத்தின் தரத்தை அறியும் கேரட் மீட்டர், தங்க நகைகளை சேமிக்கும் திட்டம், இலவச சர்வீஸ் வசதிகள் உள்ளன. தங்கம் நுகர்வில் தமிழகம் முதன்மையாக உள்ளது. எங்களது நிறுவனத்தின் 10 சதவீத விற்பனை தமிழகம் கொடுக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

படிக்க வேண்டும்

spot_img