fbpx
Homeபிற செய்திகள்மாணவர்கள் தனித்துவம், முக்கியத்துவத்தை இழக்கக் கூடாது- சோனா கல்லூரி முதலாமாண்டு வகுப்பு துவக்கவிழாவில் அறிவுரை

மாணவர்கள் தனித்துவம், முக்கியத்துவத்தை இழக்கக் கூடாது- சோனா கல்லூரி முதலாமாண்டு வகுப்பு துவக்கவிழாவில் அறிவுரை

சேலம் சோனா தொழில் நுட்பக் கல்லூரியில் 2022-23-ம் கல்வியாண்டிற்கான இளங்கலை பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா கல்லூரியில் நடைபெற்றது.

கல்லூரி துணைத்தலைவர் கள் ,சொக்குவள்ளியப்பா, தியா குவள்ளியப்பா முன்னிலை வகித்தனர். அகாடெமிக் டீன் அகிலாண்டேஸ்வரி வரவேற் றார். முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார், நிர்வாகத் தினர், முதலாமாண்டு மாணவ, மாணவிகள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

சிறப்பு விருந்தினர் பெங்க ளூர் ஐ.ஐ.டி.நிறுவன இயக் குநர் முனைவர் சடகோபன் பேசும்போது, மாணவர்கள் எந்த சூழ்நிலையிலும் தங்கள் முக்கியத்துவத்தையும், தனித்துவத்தையும் இழந்து விடக்கூடாது. இதற்கு தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் மிக அவசியம் என்றார்.

கௌரவ விருந்தினர் சென்னை சி.எஸ்.எஸ்.கார்ப் நிறுவனத்தின் மூத்த இயக்குநர் மணிகண்டன் ராமச்சந்திரன் பேசும்போது, சிறந்த உள் கட்டமைப்பு, நல்ல பேராசிரியர்கள், மாணவர் களை சிறந்தவர்களாக தயார்படுத்துதல், ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் சோனா கல்லூரி சிறந்து விளங்குவதால்தான் அகில இந்திய அளவில் சிறந்த கல்லூரிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது.

இத்தகைய கல்லூரியில் பயிலும் வாய்ப்பு கிடைத்ததற்கு மாணவர்கள் நீங்கள் பெருமைப்பட வேண்டும் என்றார். சோனா கல்வி குழுமத்தின் தலைவர் வள்ளியப்பா தலைமை தாங்கி பேசும்போது, வாழ்வின் முக்கிய தருணமான இந்த காலகட்டத்தில் படிப்பில் முழுக்கவனம் செலுத்தி மாணவர்கள் சிறந்து விளங்க வாழ்த்துகள் என்றார்.

கல்வி உதவித்தொகை, பிற வசதிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சோனா கல்லூரி தலை சிறந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறது. இதணை மாணவர்கள் முழு மையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கல்லூரி முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார் கேட்டுக்ª காண்டார். டீன் (அட்மிஷன்) சத்திய பாமா நன்றி கூறினார்.

சோனா கல்வி குழுமத்தின் முதல்வர்கள் கார்த்திகேயன், காதர்நாவஷ், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை துறைத்தலைவர் ரேணுகா மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img