தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி நகர கூட்டுறவு வங்கியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்த பொது நகைக்கடன் தள் ளுபடி சான்றுகள் மற்றும் நகைகளை பயனா ளிகளிடம் வழங்கும் நிகழ்ச்சியை மீன் வளம் , மீனவர் நலம் கால்நடை பராமரிப்பு துறை அமைச் சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அனிதா ஆர் ராதாகிருஷ் ணன் துவக்கிவைத்தார்.
நகைகளையும், தள்ளுபடி சான்றிதழ்களை யும் வழங்கி அவர் சிறப்புரை ஆற்றினார். மாப்பிள்ளையூரணி நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற பொது நகைக்கடன் தள்ளுபடியில் 286 பயனாளிகள் பயன்பெற் றனர் என்பது குறிப்பிடத் தக்கது.
இந் நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்ட மன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாப்பிள்ளையூரணி நகர கூட்டுறவு வங்கி தலைவரும், பஞ்சாயத்து தலைவருமான சரவணக்குமார் , கூட் டுறவு வங்கி செயலாளர் பாலமுருகன், ஓட் டப்பிடாரம் ஊராட்சி மன்றத்தலைவர் இளைய ராஜா தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாப் பிள்ளையூரணி கிளை கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் பயனாளி கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.