சென்னை இந்திரா ரத்னா அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு ஆண் டும் பொது சேவை யில் சிறந்து விளங்கும் ஒரு பெண்ணிற்கு அவரது சேவையை பாராட்டி இந் திரா ரத்னா விருதுடன் கேடயம் பரிசுத்தொகை, பாராட்டு பத்திரம் வழங் கபடுகிறது.
இவ்வாண்டுக்கான இந்த விருது கோவை மாவட்டம் மேட்டுப் பாளையத்தில் வசிக் கும் கவிதா என்ற பெண்ம ணிக்கு கோவையில் நடை பெற்ற விழாவில் இந்திரா ரத்னா அறக்கட்டளை தலைவர் டாக்டர் சிலு வை வழங்கினார்.
இந்நிகழ்வில் அறக்கட்டளையுடன் தொடர்புடைய ஆந் திரா, தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் செயல்படும் தன்னார்வ அமைப்புகளின் தலைவர்கள், ஊழியர்கள், கேர் பௌண்டேஷன் தலைவி பிரியதர்ஷனி, பழங்குடி மக்கள் வாழ்வாதாரக் கூட்டமைப்பு மற்றும் சிவா அறக்கட்டளையின் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
விருது பெற்ற கவிதா கடுமையான தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவராய் இருந்தாலும் தொடர்ந்து மாற்றுத்திறனாளி களுக்கான சேவையில் ஈடுபட்டு வருவதை பா ராட்டியே இந்த விருது வழங்கப்பட்டது.
அவருக்கு பல ஆண்டுகளாக இலவச சிகிச்சை அளித்து வரும் கோவை கங்கா மருத்துவ மனையின் பிரதிநிதியும் கூட்டத்தில் கலந்து கொண்டு வாழ்த்து தெரி வித்தார்.