தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரை நிர்வாண போராட்டம் நடத்தினர்.
இவர்களது முக்கிய கோரிக்கையான மத்திய அரசு 2022 சட்ட மசோதா திருத்தத்தை தடுத்து நிறுத்த வேண்டும், பென்ஷன் ஓய்வூதியர்களுக்கு 10% உயர்த்தி வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியத்தை உடனடியாக கொடுக்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், ஒப்பந்த பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக பணி உயர்வு செய்ய வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.