fbpx
Homeபிற செய்திகள்முதல்வர் தங்கக்கோப்பை கிரிக்கெட் போட்டி: சி.ஆர்.ஈகில்ஸ் அணிக்கு கோப்பை, ரொக்கப் பரிசு

முதல்வர் தங்கக்கோப்பை கிரிக்கெட் போட்டி: சி.ஆர்.ஈகில்ஸ் அணிக்கு கோப்பை, ரொக்கப் பரிசு

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை யொட்டி திருப்பூர் வடக்கு, மத்திய மாவட்ட தி.மு.க. இளை ஞரணி சார்பில் மு.க.ஸ்டா லின் தங்கக்கோப்பை கிரிக்கெட் போட்டி, குமாரனந்தபுரம் எல்.ஜி. மைதானத்தில் நடைபெற்றது.
தொடக்கவிழாவில், மத்திய மாவட்ட இளைஞ ரணி அமைப்பாளர் தங்க ராஜ் தலைமை தாங்கினார்.

வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன் வரவேற்றார். திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. க.செல்வராஜ் போட்டிகளை தொடங்கி வைத்தார்.
தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி. மு.நாகராசன், 46-வது வார்டு கவுன்சிலர் கோவிந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பரிசளிப்பு விழாவில், தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன், தி.மு.க. திருப் பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல. பத்மநாபன், திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் ஆகியோர் கோப்பை மற்றும் பரிசு களை வழங்கினர்.

திருப்பூர் வடக்கு மாநகர இளைஞரணி அமைப்பாளர் முத்துக்குமார் நன்றி கூறினார். இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற சி.ஆர். ஈகில்ஸ் அணிக்கு கோப்பை மற்றும் ரூ.15 ஆயிரம் பரிசும், 2-ம் இடம் பிடித்த ஒயிட் ரோஸ் அணிக்கு கோப்பை மற்றும் ரூ.10 ஆயிரம் பரிசும், 3-ம் இடம் பிடித்த அணிக்கு கோப்பை மற்றும் ரூ.5 ஆயிரம் பரிசும் வழங்கப் பட்டது.

திருப்பூர் மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் எம்.எஸ்.ஆர்.ராஜ், திவாகரன், சசி, வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வசந்த், ராஜசேகர், ஒன்றியச் செயல £ளர் விஸ்வநாதன், தெற்கு மாநகர இளைஞரணி அமைப்பாளர் பி.ஆர்.செந்தில்குமார், 22-வது வார்டு கவுன்சிலர் ராதா கிருஷ்ணன், திருப்பூர் வடக்கு மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பாண்டித்துரை, வஞ்சிமுத்து, பாலசுப்பிரமணி, தெற்கு மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் விக்னேஷ்,, பகுதி இளைஞரணி அமைப் பாளர்கள் ராம்குமார், ராஜேஷ்கண்ணன், சிவக்குமார், தியாகு ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img