fbpx
Homeபிற செய்திகள்மேட்டுப்பாளையம் அருகே யானை தாக்கி ஜேசிபி டிரைவர் பலி

மேட்டுப்பாளையம் அருகே யானை தாக்கி ஜேசிபி டிரைவர் பலி

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் நவீன்குமார் (27). இவர் சிறுமுகையை அடுத்துள்ள ஆலாங் கொம்பு விஸ் கோஸ் காலனியில் தங்கி ஜேசிபி டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் நேற்றிரவு மது அருந்துவதற்காக விஸ்கோஸ் ஆலையின் பின்புறம் உள்ள பவானியாற்றின் நீர்த்தேக்கப்பகுதிக்குச் சென்றுள்ளார். மது அருந்தி விட்டு மீண்டும் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்ப கிளம்பியுள்ளார்.

இந்நிலையில் அப்பகுதியில் மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை நவீன்குமாரை பலமாக தாக்கி யுள்ளது. இதில் நவீன்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இச்சம்பவம் குறித்து அறிந்த சிறுமுகை வனத்துறையினர் மற்றும் போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு மேட்டுப் பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து சிறுமுகை வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img