fbpx
Homeபிற செய்திகள்மேயர் கல்பனா, கவுன்சிலர் ராமமூர்த்திக்கு குடியிருப்போர் நல சங்கம் பாராட்டு விழா

மேயர் கல்பனா, கவுன்சிலர் ராமமூர்த்திக்கு குடியிருப்போர் நல சங்கம் பாராட்டு விழா

கோவை மாநகர மேயர் கல்பனா ஆனந்தகுமாருக்கும், 12வது வட்ட மாமன்ற உறுப்பினர் வி.ராமமூர்த்திக்கும், பிருந்தாவன், ராக்கச்சி கார்டன், சங்கர் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் வரவேற்பு மற்றும் பாராட்டு விழா கோவை மணியகாரன்பாளையம் தேவ் மகாலில் நடைபெற்றது.

விழாவிற்கு செயலாளர் அன்னூர் என்.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சிந்தனைக் கவிஞர் கவிதாசன் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் மேயருக்கும், கவுன்சிலருக்கும் நினைவுப் பரிசு வழங்கி பொன்னாடை அணிவிக்கப்பட்டது.

நிகழ்வில் பேசிய மேயர் கல்பனா ஆனந்தகுமார், இப்பகுதி மட்டுமல்ல, கோவையில் 100 வார்டுகளுக்கும் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் எனவும், இப்பகுதியில் ஒரு புதிய நூலகம், ரேஷன் கடை கொண்டு வரப்படும் எனவும், குடிநீர் விநியோகம் சீராக விநியோகிக்க ஆவன செய்யப்படும் எனவும் பேசினார். முடிவில் ரூட்ஸ் கே.ரங்கராஜ் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img