fbpx
Homeபிற செய்திகள்மே 15 வரை கொங்குநாடு மருத்துவமனையில் கோடை சிறப்பு சலுகையில் அறுவை சிகிச்சை

மே 15 வரை கொங்குநாடு மருத்துவமனையில் கோடை சிறப்பு சலுகையில் அறுவை சிகிச்சை

கோடை சிறப்பு சலுகையில் அனைத்து அறுவை சிகிச்சைகளும் கொங்குநாடு மருத்துவ மனையில், வரும் மே மாதம் 15-ம் தேதி வரை மேற்கொள்ளலாம் என அம்மருத்துவமனை தெரிவித்துள்ளது.

கடந்த 30 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் அறுவை சிகிச்சை தேவைப் படுவோருக்கு சிறப்புச் சலுகையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. கோவை டாடாபாத்தில் சுமார் 250 படுக்கைகளுடன் மருத்துவமனை அமைந்து ள்ளது.
பேக்கேஜ் முறையில், மருத்துவமனை பில், மருந்து பில், டாக்டர் பில் அனைத்தும் அடங்கும்.

பொது அறுவை சிகிச்சைகளான கழுத்தில் கட்டி, டான்சில், வயிற்றில் கட்டி, பெண்களுக்கு தைராய்டு, ஹெர்னியா, சுன்னத், விரைவீக்கம் போன்ற ஆபரேசன்கள், கர்ப்பப்பையில் கட்டி, குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் போன்றவை மேற்கொள்ளப்படும்.

லேப்ரோஸ்கோப் மூலம் செய்யப்படுகின்ற அறுவை சிகிச்சைகளும் சிறப்புச் சலுகையில் செய்யப்படும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சையில் அனைத்து எலும்பு முறிவுகளுக் கும் சீ-ஆர்ம் பயன் படுத்தி நவீன அறுவை சிகிச்சைகள் செய்யப்ப டுகின்றன. மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளும் செய்யப்படுகின்றன.
மூளை கட்டி அறுவை சிகிச்சை, தண்டுவட அறுவை சிகிச்சை, வாய்ப்புற்று அறுவை சிகிச்சை, மார்பு கட்டி அறுவை சிகிச்சைகளும் செய்யப்படும்.

மருத்துவமனைக்கு வந்து அறுவை சிகிச்சை டாக்டரை நேரில் ஆலோசனை கேட்டு, செலவு மற்றும் சிறப்புச் சலுகை போன்றவற்றையும், பேக்கேஜ் செலவையும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

இத்தகவலை கொங்குநாடு மருத்துவ மனை நிர்வாக இயக்குநரும் தலைமை அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் ப.ராஜூ தெரிவித்தார்.
மருத்துமனையில் மெடிக்கல் டைரக்டர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் ஆர்.கார்த்திகேயன் உடன் இருந்தார். விவரங்களுக்கு 9944475249 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

படிக்க வேண்டும்

spot_img