ராஜபாளையம் நகராட்சியில் திமுக சார்பில் ஆறாவது வார்டு பவித்ரா ஷ்யாம் வெற்றி பெற்றார். இவரை நகரமன்றத் தலைவராக நகராட்சி கமிஷனர் சுந்தராம்பாள் அறிவித்தார்.
மேலும் துணைத் தலைவர் பதவிக்கு 32வது வார்டு கவுன்சிலர் கல்பனா தேர்வு செய்து துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டார்.
இந்த நகராட்சியில் மொத்தம் 42 கவுன்சிலர்கள் உள்ளனர்.
அதிமுக கவுன்சிலர்கள் 4-வார்டு மீனாட்சி, 18 வார்டு கவுன்சிலர் சோலைமலை ஆகிய இருவரும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
மற்ற 40 கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்