fbpx
Homeதலையங்கம்வரவேற்புக்குரியது, பாராட்டுக்குரியது

வரவேற்புக்குரியது, பாராட்டுக்குரியது

ட்ரோன்களை பெருமளவில் பூச்சி மருந்து, உரம், ஊட்டச்சத்து மருந்துகளை தெளிப்பதற்கு பயன்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

நவீன காலத்தில் விவசாயிகளுக்கு செலவில்லாத வகையிலும், முழுமையாக நிலங்களில் இந்த மருந்துகளை தெளிக்கும் வகையிலும் ட்ரோன்களின் பயன்பாடு இருக்க வேண்டும் என்பது விவசாயிகள் எதிர்பார்ப்பாகும்.

இப்போது பூச்சி மருந்துகளை கையால் தெளிப்பது அல்லது ஸ்பிரே செய்வது போன்ற பணிகளில் ஈடுபடும் விவசாயிகளின் உடல்நலத்தையும் இந்த ட்ரோன்கள் காப்பாற்றும்.

மேலும் ஏராளமானவர்களுக்கு ஆளில்லா வான்வெளி வாகன கழகம் வேலை வாய்ப்பு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயிகள் மீனவர்களின் பயன்பாட்டுக்காக இந்த ட்ரோன்களின் பணி ஒரு புது யுக புரட்சியாகும் என்பதில் சந்தேகமே இல்லை. ஏற்கனவே கடந்த 2018ல் சென்னையில் ட்ரோன்கள் மூலம் நிலஅளவை உட்பட பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வெற்றியும் கண்டிருக்கிறது.

நவீன காலத்தில் ட்ரோன்களின் பயன்பாடு பல பணிகளுக்கு பயன்படுத்தப்படும் நிலையில் விவசாயம், மீன்வளத்துறையில் பயன்படுத்தப்பட போவது மிகவும் வரவேற்புக்குரியது, பாராட்டுக்குரியது.

படிக்க வேண்டும்

spot_img