fbpx
Homeபிற செய்திகள்வாடிக்கையாளர்களைக் கவரும் ‘தியோபுரோமா’

வாடிக்கையாளர்களைக் கவரும் ‘தியோபுரோமா’

இந்தியாவின் அதிகம் விரும்பப்படும் மிகப் பெரிய பிரீமியம் பேக்கரி மற்றும் பட்டிஸரி பிராண்டான தியோபுரோமா, இந்தியாவின் கலாச்சாரத் தலைநகரான சென்னையில் தொடங்கியது.

பண்டிகை, கொண்டாட்டம் நிறைந்த இந்த சீசனில் இந்தச் செய்தியை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். பிரவுனிகள், கேக்குகள், இனிப்பு வகைகளுக்குப் பெயர் பெற்றது தியோபுரோமா

தியோபுரோமா தனது முதல் விற்பனை மையத்தை கடந்த 14-ம் தேதி சென்னை அண்ணா நகரில் திறந்தது. இரண்டாவது விற்பனை மையத்தை கூடிய விரைவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் திறக்க உள்ளது.

இன்றைக்கு பிரவுனிகள், கேக்குகள், இனிப்பு வகைகள், குக்கீகள் மற்றும் கிராக்கர்கள், பிரெட், நொறுக்குத்தீனிகள் ஆகியவற்றுடன் வியன் னாசரீஸ், பானங்கள், தனித்துவமான பண்டிகை – பருவகால உணவுத் தயாரிப்புகள் போன்ற பல வகைகளில் விரிவடைந்து, பெரிதும் விரும்பப்படும் தயாரிப்பு வரம்பைக் கொண்டுள்ளது.

“எங்கள் பிரத்யேகத் தயாரிப்புகளை சென்னை யில் அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெரிதும் மகிழ்ச் சியடைகிறோம். உணவு, உணவுப் போக்குகள் சார்ந்த விழிப்புணர்வை அதிக அளவில் பெற்ற உணவுப் பிரியர்களைக் கொண்ட ஒரு பெரிய சமூகம் இந்த நகரத்தில் உள்ளது.

இங்கு எங்கள் முதல் கடையைத் திறப்பதில் பெரிதும் மகிழ்ச்சியடைகிறோம்” என்கிறார் தியோபுரோமாவின் தலைமை நிர்வாக அதிகாரி ரிஷி கொர்.
தயாரிப்புகளில் பலவிதமான ஃபட்ஜி பிரவுனிகள், பலருக்கும் பிடித்தவற்றில் ஓவர்லோட் பிரவுனி, மில்லியனர் பிரவுனி மற்றும் (முட்டை இல்லாத) அவுட்ரேஜியஸ் பிரவுனி ஆகியவை அடங்கும்.

தியோபுரோமாவின் மிகவும் விரும்பப்படும் கேக்குகளில் பெஸ்ட்செல்லர் டச்சு ட்ரஃபிள் கேக், ஹேசல்நட் பிரலைன் மூஸ் கேக், சாக்கோஹாலிக் கேக் மற்றும் ஓபியம் கேக் ஆகியவை அடங்கும்.

படிக்க வேண்டும்

spot_img