fbpx
Homeபிற செய்திகள்விலை ஆதரவு திட்டத்தின் கீழ் பச்சைப்பயிறு கொள்முதல்- நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தகவல்

விலை ஆதரவு திட்டத்தின் கீழ் பச்சைப்பயிறு கொள்முதல்- நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தகவல்

பச்சைப்பயிறு சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசின் NAFED நிறுவனம் மூலம் பச்சைப்பயிறு கொள்முதல் செய்யப்பட உள்ளது.

விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்கவும், அவர்களின் வருவாயை பெருக்கிடவும், தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற் கொண்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத் திற்கு கொள்முதல் இலக்காக 350 மெ.டன் நிர்ணயம் செய்யப்பட்டு பச்சைப்பயிறு கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
தற்போது பச்சைப் பயிறு கிலோ ஒன்றுக்கு ரூ.60/- முதல் ரூ.75/- வரை உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி அரசு நிர்ணயம் செய்த தரத்திற்கு மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையில் (MSP) பச்சைப்பயிறு ஒரு குவிண்டால் ரூ.7755/-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட் டத்தில் நாமக்கல் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் புதன்சந்தையில் பச்சைப் பயிறு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகிய விவரங்களுடன் நாமக்கல் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் விற்பனைக்கூடக் கண்காணிப்பாளரை அணுகி பதிவு செய்து கொள்ளலாம். (அலை பேசி எண் : 83003 24550)

பச்சைப்பயிறு கொள்முதல் 29.12.2022 வரை நடைபெற உள்ளது. பச்சைப்பயிறு விளை பொருளுக்கான உரிய தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடி யாக வரவு வைக்கப்படும்.

தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலனிற்காக மேற்கொண்டுள்ள இந்த கொள்முதல் திட்டத்தில் பச்சைப்பயிறு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதிகளவில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இத்தகவலை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img